தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு: பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள்; கருணாநிதி அறிவிப்பு
முதல்- அமைச்சர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011
பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொறுப்பாளர்கள்
வ.எண் | பெயர் | பொறுப்பு |
---|---|---|
1 | மருத்துவர் அய்யா | நிறுவனர் |
2 | சின்ன அய்யா | இளைஞர் அணித்தலைவர் |
3 | கோ.க.மணி | தலைவர் |
4 | ச.வடிவேல் இராவணர் | பொதுச்செயலாளர் |
5 | க.அக்பர் அலி சயீப் | பொருளாளர் |
6 | ஜெ.குரு | வன்னியர் சங்கத்தலைவர் |
7 | தி.வெல்முருகன் | இணை பொது செயலாளர் |
8 | இராம முத்துக்குமார் | தலைமை நிலையச் செயலாளர் |
9 | மு. இசக்கி | மாநில அமைப்புச் செயலாளர் |
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு: பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள்; கருணாநிதி அறிவிப்பு
![]() |
மருத்துவர் அய்யா & முதல்வர் கலைஞர் |
இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 9 மணி அளவில் கோபாலபுரத்தில் உள்ள முதல் - அமைச்சர் கருணாநிதி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். அவர்கள் இருவரும் சுமார் 2 மணி நேரம் பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ் தனது பேரன் திருமண அழைப்பிதழை முதல் - அமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்து மணவிழாவுக்கு வரும்படி அழைத்தார்.
இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி முதல்- அமைச்சர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உடன்பாடு குறித்து முதல் - அமைச்சர் கருணாநிதி கூறியதாவது:-
டெல்லிக்கு நான் சென்றிருந்தபோது, சோனியா காந்தியை சந்தித்து - வர விருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைக்குப் பாட்டாளி மக்கள் கட்சியோடு ஒப்பந்தம் ஏற்பட்டு தி.மு.க.வுடன் இணைந்து இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல் - அமைச்சர் கருணாநிதியை சந்தித்த பிறகு டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
\
கேள்வி:- 2 மணி நேரமாக முதல்வரோடு பேசியிருக்கிறீர்கள். என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள்?
பதில்:- எனது பேரன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக வந்தேன். அதோடு தேர்தல் உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்ள வந்தேன். மகிழ்ச்சியோடு முதல்வரைச் சந்திக்கச் சென்றேன். இப்போது மகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக்கிறேன்.
கேள்வி:- எத்தனை சீட் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?
பதில்:- 31 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதோடு ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- கடந்த தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிடுவீர்களா?
பதில்:- எந்தெந்த தொகுதிகள் என்பதை தேர்தல் குழுக்கள் முடிவு செய்யும்.
கேள்வி:- சோனியா காந்தியை எப்போது சந்திப்பீர்கள்?
பதில்:- முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி இரண்டு நாட்களுக்கு முன்பு சோனியாகாந்தியை சந்தித் திருக்கிறார்.
கேள்வி:- திருமண அழைப்பிதழைக் கொடுக்க வந்த நீங்கள், தேர்தல் உடன்பாட்டை எதிர்பார்த்து வந்தீர்களா?
பதில்:- எதிர்பார்த்துதான் வந்தேன்.
கேள்வி:- 45 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியோடுதான் கூட்டணி வைப்போம் என்று சொன்னீர்களே?
பதில்:- தேர்தலுக்கு முன்னால் ஊடக நண்பர்களைச் சந்திக்கும்போது நாம் எண்ணிக்கையை அதிகப்படுத்தித்தான் சொல்ல வேண்டும்.
கேள்வி:- தி.மு.க. மற்றும் அதனோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்று எதிர்க்கட்சியினர் சொல்லியிருக்கிறார்களே?
பதில்:- வருகிற சட்ட மன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான அணியில்- தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இன்னும் பல கட்சிகள் சேரவிருக்கின்றன. இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
கேள்வி:- கடந்த முறை அள்ளியும் கொடுக்க வில்லை- கிள்ளியும் கொடுக்கவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். இந்த முறை அதே அளவிற்குத் தான் சீட் பெற்றிருக்கிறீர்களே?
பதில்:- நீங்கள் அதை எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளுங்கள்.
கேள்வி:- பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பார் கெயினிங் பவர் குறைந்து இருக்கிறதா?
பதில்:- குறையவும் இல்லை - கூடவும் இல்லை.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்
புதன், 16 பிப்ரவரி, 2011
தமிழ் ஓசை நாளெடு துவக்க விழா - தலையங்கம்
கடந்த நூற்றாண்டில் முப்பெரும் இயக்கங்கள் தமிழ்ச் சமுதாயத்தை புதிய வார்ப்படத்தில் வடித்தன, அவை - தமிழர் இயக்கமாகப் பரிணமித்த சமூக நீதி இயக்கம். தமிழர்களுக்கு மான உணர்ச்சியையும். அறிவார்ந்த பார்வையையும் பாய்ச்சிய தன்மான இயக்கம். சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் தமிழுக்கே முதன்மையான பீடம் அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய தமிழ் இயக்கம் ஆகியவையே, சமூக நீதி இயக்கம் - தமிழர்களுக்கு உரிமை வேட்கையைப் பாய்ச்சியது, தன்மான இயக்கம்- தமிழர்களுடைய மனங்களுக்குப் பூட்டப்பட்டிருந்த விலங்குகளை உடைத்து. சுய சிந்தனைக்கும் அறிவார்ந்த பார்வைக்கும் வழி வகுத்தது, தமிழ் இயக்கம் - மூலையில் ஒதுக்கப்பட்டுக் கிடந்த தமிழுக்குப் பல்வேறு துறைகளிலும் முன்னுரிமை அளிக்கக்கோரியது,
அதோடு கடந்த நூற்றாண்டின் மத்தியில் கிராமங்களிலெல்லாம் ஏற்பட்ட கல்விப்புரட்சி - காலகாலமாகக் கல்வி மறுக்கப்பட்டு. ஒடுக்கப்பட்டுக் கிடந்த கோடானகோடி மக்களிடையே புதிய வெளிச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது, சமூக ரீதியாகவும். கல்வி அடிப்படையிலும். கலாச்சார அடிப்படையிலும் ஒதுக்கப்பட்டுக் கிடந்த மக்களிடையே விழிப்புணர்ச்சியும். உரிமைத்துடிப்பும் மேலோங்கி நிற்கின்றன, இந்த மகத்தான சமுதாய புரட்சிக்கு வழிவகுத்த முப்பெரும் இயக்கங்களுக்கும். அவற்றின் மூலவர்களான நமது மூதாதையர்களுக்கும்- தமிழினத்தின் சார்பில். தமிழோசை நாளிதழ் இதயாஞ்சலியைத் தெரிவித்து. தனது பயணத்தை இன்று தொடங்குகிறது, அரசியல் சார்பற்ற நடுநிலை இதழான தமிழோசை - தமிழனின் குரலாக ஒலிக்கும்,
சமூக நீதி என்றால் அதை இடஒதுக்கீடு என்று சுலபமாகச் சுருக்கிவிடுகிறார்கள், ஆனால். அதன் வரம்பும் பொருளும் விரிவானவை, அரசு நிர்வாகப் பணிகளில் மட்டுமின்றி. பொருளாதாரம். தொழில்துறை. கலாசாரம். நீதி. பரிபாலனக் கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளிலும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையான பிரதிநித்துவ பங்கு கிடைக்குமாறு செய்வதில் தமிழோசை முன்னின்று போராடும், தற்போதைய சமூக அமைப்பு - மேடுபள்ளங்களை ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது, சமதளத்தில் அமைந்திராத சமுதாயத்தில் சம வாய்ப்பு என்பது வெறும் கானல் நீராகும், எனவே சமச்சீருடைய சமதளச் சமுதாயம் அமைவது வரையில். சமூகநீதிக்கொள்கை துடிப்புடன் செயற்படுத்தப்படவேண்டும்- என்பதற்காக பாடுபட தமிழோசை கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது,
அதே சமயத்தில் தற்போதைய பொருளாதார நிலவரங்கள். பணக்காரன் பெரிய செல்வந்தனாக உயர்வதற்கும். ஏழை பரம ஏழையாக நொடிப்பதற்கும் வகைசெய்து வருகின்றன, இந்நிலையில் பொருளாதார ரீதியாக ஏழை. எளிய மக்களை-தக்க பொருளாதார திட்டங்கள் மூலம் கைதூக்கிவிட்டு. சமதர்ம சமத்துவச் சமுதாயத்தை நிறுவும் விதத்தில் அரசினரின் கொள்கைகள் அமைந்திருக்கவேண்டுமென்ற கோரிக்கையைத் தமிழோசை ஓயாது வற்புறுத்தி வரும், தமிழ் நிலத்தின் பாரம்பரியப் பண்பாடு - சகிப்புத்தன்மையும் சமய நல்லிணக்க உணர்வுமே ஆகும், அந்த முறையில் நமது அரசியல் சாசனத்தின் தோற்றுவாயிலேயே முத்திரிக்கப்பட்டுள்ள சமயச் சார்பற்ற கோட்பாட்டின் நெறிமுறைகளைக் கட்டிக் காப்பதில் தமிழோசை ஆர்வத்துடன் பணியாற்றும்,
உலககெங்கும் பரவலாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கிடையே கலாச்சாரப் பாலமாக தமிழோசையின் பணிகள் அமைந்திருக்கும், தேசீயத் தமிழினத்தின் ஓர் அங்கமான ஈழத் தமிழர்- தாய்த் தமிழகத்துடன் இரத்த சம்பந்தமுடையவர்கள், அந்த முறையில். ஈழத் தமிழரின் நியாயமான கோரிக்கைகளான சுயமரியாதையுடன் கூடிய வாழ்வுரிமை. மொழியுரிமை. கலாச்சாரப் பாதுகாப்புரிமை. சமத்துவக் குடியுரிமை ஆகிவற்றிற்கு ஈடுதரக்கூடிய விதத்தில் ஈழப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்படவேண்டும் என்பதை உரத்த குரலில் ஓங்கி ஒலிக்கும் -தமிழோசை,
அடுத்து. தமிழின் பலமுனை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் - அதற்கான திட்டங்களை முன்னின்று செயற்படுத்துவதற்குமாக நிறுவப்பட்டுள்ள பொங்கு தமிழ் வளர்ச்சி அறகட்டளை நிறுவனம் - தமிழ்க் கலாச்சார மேம்பாட்டுக்குரிய கருவியாகத் தமிழிசோசையைத் தொடங்கியுள்ளது, தமிழிரியக்கம். தமிழியக்கம். தமிழிசையியக்கம் ஆகிய மும்முனைகளில் ஆக்கப்பணிகளை ஆற்றுவதற்குத் தமிழோசை தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்கிறது, திரட்டிக் கூறுமிடத்து. தனிமனித உரிமை. குடும்ப உறவுகளின் அந்தரங்கப் புனிதம். சமூகங்களுக்கிடையே ஒப்புரவு ஆகிய மக்களாட்சி அம்சங்களின் ஆரோக்கிய அடித்தளத்தை வலுப்படுத்துவதில் தமிழோசை முனைந்து பாடுபடும், தமிழகத்தின் வளர்ச்சி. தமிழினத்தின் எழுச்சி. தமிழின் பலமுனை மேம்பாடு - ஆகியவற்றுக்கு ஓயாது உழைக்க தமிழோசை தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொள்கிறது, தமிழோசையின் இந்த ஒப்பற்ற கலாச்சார சீரமைப்புப் பணிக்கு விழிப்புள்ள தமிழ்ப் பெருமக்களின் ஆதரவு பொங்கியெழுந்து வருவது நிச்சயம் என்ற திட நம்பிக்கையுடன். தமிழோசை தனது கொள்கைப் பட்டயத்தை தமிழ்ச்சமுதாயத்தின் முன் அன்புரிமையுடன் படைப்பதில் பெருமை கொள்கிறது,
தமிழ் ஓசை
சமூக அநீதிகளுக்கு எதிரான இடியோசை
தமிழ்க்கலாச்சாரத்தின் குழலோசை
வருங்காலத் தமிழகத்தின் மணியோசை
தமிழ் இனத்தின் இதய கீதம் (தமிழ் ஓசை தொடக்க நாள் இதழின் முதல் பக்கத்துக்குரிய சிறப்புத் தலையங்கம்)
பாட்டாளி மக்கள் கட்சி 2007 ஆம் ஆண்டு நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்
பாமக மக்களுக்காக என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கும், நடிப்பின் மூலம் புகழ்பெற்று நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்றுவேன் என்று வசனம் பேசும் கட்சிக்கும், எங்களை ஏளனமாக பார்க்கும் பிற கட்சியினருக்கும் , பாமகவை பற்றி விமர்சிப்பவருக்கும், எங்கள் மருத்துவர் அய்யா அவர்கள் ஒரு ஆண்டில் நடத்திய மக்கள் நல போராட்டங்கள் எத்தனை என்று எங்களால் இயன்ற அளவில் தகவல்களை வெளியிடுகிறோம் . இதோ உங்களின் பார்வைக்காக
2007 ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா அவர்கள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்
30.03.07 27
சதவீத இடஒதுக்கீட்டிற்கு தடை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும்.
03.04.07
காலை 10.00 மணிக்கு சென்னையில் மானமீட்பு இயக்கம் நடத்திய கிரிக்கெட் விளயாட்டை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.
04.04.07
பூந்தமல்லி கூத்தப்பாக்கம் நில ஆக்கிமிரப்பு. பொதுக்கூட்டம்.
18.04.07
சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைவதை கண்டித்து அக்கடைகடை மூடக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்.
09.05.07
சிமெண்ட் விலை ஏற்றத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
15.05.07
சென்னையில் மது ஒழிப்பு பிரச்சாரம் துவக்கி வைத்தல்.
18.05.07
சென்னையில் மது ஒழிப்பு பிரச்சாரப் பொதுக்கூட்டம்.
05.06.07
பள்ளி, கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.
02.07.07
சுயநிதிக் கல்லூரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்.
06.08.07
திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியில் டைடானியம் தொழிற்சாலை அமைவதை கண்டித்து சாத்தான்குளம், இராதாபுரம் மக்களிடம் கருத்து கேட்டறிதல்.
07.08.07
நெல்லைதூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் மணல்கொள்ள தடுக்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
13.08.07
காலை சோழிங்கநல்லூரில் அனல்மின் நிலையம் அமைவதை பொதுமக்களிடம் கருத்து கேட்பு.
20.08.07
காலை 10.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கொள்ளயை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்.
20.04.2007
இலங்கை அரசுக்கு நடுவண் அரசு போர்க் கருவிகள் வழங்குவதை நிறுத்தக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்.
21.08.07
சேலத்தில் மணல் தடுப்பு போராட்டம்.
05.09.07
முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமாரசாமி கல்வி அறிக்கை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம் சென்னையில்.
08.09.07
காலை 10.00 மணிக்கு கிருத்துவர்கள் உண்ணாவிரதம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு.
16.09.07
மாலை 4.00 மணிக்கு கடலூர் தியாகவள்ளி என்ற ஊரில் புதிய அனல் மின்நிலையம் அமைவதை எதிர்த்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு.
12.11.07
காஞ்சிபுரம் மாவட்டம், படாலம் சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து போராட்டம்.
22.11.07
காலை 11.00 மணிக்கு 27% சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம்.
பிற்படுத்ப்பட்ட மாணவருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மாணவர் சங்கம் சார்பில் ஆடு, மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்கள் - பாமக அளித்த திட்ட வரைவுகள் மற்றும் பாமகவின் போராட்ட வரலாறுகள்
பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு மற்றும் கட்சி நடத்திய மக்கள் நல போராட்டங்கள் , நடத்திய மாநாடுகள், பேரணிகள் பற்றிய குறிப்புகள் ஆகியவை இங்கு மின் நூல்களாக இடம்பெற இருக்கின்றன .
உங்களிடம் ஏதேனும் கட்சியைப் பற்றிய படங்கள் , கட்டுரைகள் இருந்தால் கீழ்க்கண்ட எமது மின்னஞ்சம் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: pmkayya@gmail.com
பாமக மற்றும் வன்னியர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
உங்களுக்காக சில நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .அவற்றை படியுங்கள் வரலாற்றை அறியுங்கள்.
1. பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு
இங்கே நூல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
அனைத்து நண்பர்களும் உறவினர்களும் படித்துப் பார்க்கவும்
2. வன்னியர்களின் இன்றைய நிலை குறித்த இரா. அருள் அவர்களின் கட்டுரை:
3. பாமக விற்கு வாக்களிப்பதால் தமிழகத்திற்கு கிடைக்கும் 100 நன்மைகள்:
கடந்த நாடளுமன்ற தேர்தலில் வெளியிடப்பட்ட அறிக்கை
4. கனல் மாத இதழ்:
உங்களிடம் ஏதேனும் கட்சியைப் பற்றிய படங்கள் , கட்டுரைகள் இருந்தால் கீழ்க்கண்ட எமது மின்னஞ்சம் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: pmkayya@gmail.com
பாமக மற்றும் வன்னியர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
உங்களுக்காக சில நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .அவற்றை படியுங்கள் வரலாற்றை அறியுங்கள்.
பாமக முற்போக்கு சிந்தனையுடன் தமிழக அரசிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்து தந்துள்ளது
அவற்றில் சிலவற்றை இங்கு உங்களின் பார்வைக்கு வைத்துள்ளோம்
பாமக எப்படி பட்ட தொலைநோக்கு பார்வை கொண்டது என்பது உங்களுக்கு விளங்கும்
1. தமிழகம் 2020 ல் எப்படி இருக்கும் என்பதற்கான திட்டம்
அவற்றில் சிலவற்றை இங்கு உங்களின் பார்வைக்கு வைத்துள்ளோம்
பாமக எப்படி பட்ட தொலைநோக்கு பார்வை கொண்டது என்பது உங்களுக்கு விளங்கும்
1. தமிழகம் 2020 ல் எப்படி இருக்கும் என்பதற்கான திட்டம்
1. பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு
இங்கே நூல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
அனைத்து நண்பர்களும் உறவினர்களும் படித்துப் பார்க்கவும்
2. வன்னியர்களின் இன்றைய நிலை குறித்த இரா. அருள் அவர்களின் கட்டுரை:
3. பாமக விற்கு வாக்களிப்பதால் தமிழகத்திற்கு கிடைக்கும் 100 நன்மைகள்:
கடந்த நாடளுமன்ற தேர்தலில் வெளியிடப்பட்ட அறிக்கை
4. கனல் மாத இதழ்:
புதன், 9 பிப்ரவரி, 2011
மக்கள் தொகை கணக்கெடுப்பு - அனைத்து சொந்தங்களும் உடனே பதிவு செய்திடுக
சென்னை: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கியது. தமிழகத்தில் ஒன்றரை லட்சம் அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2011&ம் ஆண்டுக்கான 15&வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி பிப்ரவரி 9&ல் தொடங்கி 28&ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடு முழுவதும் இந்தப் பணி இன்று காலை தொடங்கியது. அலுவலர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் விவரங்களை சேகரித்தனர்.
இப்பணியில் ஆசிரியர், அரசு அலுவலர்கள் உள்பட 29 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 9 ஆயிரம் பேர் கணக்கெடுக்கின்றனர். தமிழகம் முழுவதும் 150 நகராட்சிகளின் ஆணையாளர்கள், மற்ற இடங்களில் வட்டாட்சியர்கள், மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில் பணி நடந்து வருகிறது.
கணக்கெடுப்பின்போது பெயர், பிறந்த தேதி, திருமணம் ஆனவரா, தாய் மொழி, இடம் பெயர்ந்தவரா, மாற்றுத் திறனாளியா, வேலை வாய்ப்பு, மதம், எத்தனை குழந்தைகள் என்பது உள்பட 29 வகையான விவரங்கள் கேட்கப்பட்டன. கணக்கெடுப்பு நடந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, கவர்னர் மாளிகையில் இருந்து தொடங்கியது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று கணக்கெடுப்பு நடத்தினர். பின்னர் மேயர் மா.சுப்பிரமணியன் வீட்டிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. 21 நாட்களில் இப்பணி முடிக்கப்படும். அதன் பிறகு காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்பட மாட்டாது. கணக்கெடுப்பாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மட்டுமே தகவல்களை கொடுக்க வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் வரும்போது விவரம் தெரிந்த ஒருவர் மட்டும் வீட்டில் இருந்து தகவல் தெரிவித்தால் போதும்.சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.
இதனால், தயக்கம் இல்லாமல் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கலாம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசின் பல்வேறு முடிவுகள் எடுக்க காரணமாக அமையும். எனவே, கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்க மறுப்போர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, வழக்கு பதிவு செய்யப்படுவோருக்கு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இப்பணியில் ஆசிரியர், அரசு அலுவலர்கள் உள்பட 29 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 9 ஆயிரம் பேர் கணக்கெடுக்கின்றனர். தமிழகம் முழுவதும் 150 நகராட்சிகளின் ஆணையாளர்கள், மற்ற இடங்களில் வட்டாட்சியர்கள், மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில் பணி நடந்து வருகிறது.
கணக்கெடுப்பின்போது பெயர், பிறந்த தேதி, திருமணம் ஆனவரா, தாய் மொழி, இடம் பெயர்ந்தவரா, மாற்றுத் திறனாளியா, வேலை வாய்ப்பு, மதம், எத்தனை குழந்தைகள் என்பது உள்பட 29 வகையான விவரங்கள் கேட்கப்பட்டன. கணக்கெடுப்பு நடந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, கவர்னர் மாளிகையில் இருந்து தொடங்கியது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று கணக்கெடுப்பு நடத்தினர். பின்னர் மேயர் மா.சுப்பிரமணியன் வீட்டிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. 21 நாட்களில் இப்பணி முடிக்கப்படும். அதன் பிறகு காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்பட மாட்டாது. கணக்கெடுப்பாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மட்டுமே தகவல்களை கொடுக்க வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் வரும்போது விவரம் தெரிந்த ஒருவர் மட்டும் வீட்டில் இருந்து தகவல் தெரிவித்தால் போதும்.சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.
இதனால், தயக்கம் இல்லாமல் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கலாம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசின் பல்வேறு முடிவுகள் எடுக்க காரணமாக அமையும். எனவே, கணக்கெடுப்பு பணிக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்க மறுப்போர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, வழக்கு பதிவு செய்யப்படுவோருக்கு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
காணொளிகள்: மாநாடுகள் - போராட்டங்கள்
மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாடு
மாவீரன் ஜெ.குரு
மாவீரன் ஜெ.குரு பகுதி 1
மாவீரன் ஜெ.குரு பகுதி 2
மாவீரன் ஜெ.குரு பகுதி 3
மாவீரன் ஜெ.குரு பகுதி 4
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)