• முதல்- அமைச்சர் கருணாநிதியும் டாக்டர் ராமதாசும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. மேலும் ஒரு மேல்-சபை எம்.பி. தொகுதியும் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.
  • திண்டிவனத்தை அடுத்த கோனேரி குப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடக்கவிழாவில் பேசிய கவர்னர்.
  • இளைஞர்களுக்கான பயிற்சிமுகாமில் கலந்துகொண்ட டாக்டர் சின்னைய்யா அவர்கள் பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்களை நீக்க பரிசிலிப்பதாக அறிவித்தார்.
  • சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அய்யா தற்போதைய சூழலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாக கூறினார்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா - ஏ.கே.மூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்

  • ஞாயிறு, 31 அக்டோபர், 2010
  • போராளி
  • முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி

     
    பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு நந்தனத்தில்உள்ளதேவர்சிலை அக்டோபர்30அன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவ படமும் வைக்கப்பட்டிருந்தது. பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மண்டல குழு தலைவர் ஜெயராமன் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    வியாழன், 28 அக்டோபர், 2010

    சாதிவாரி கணக்கெடுப்பை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி முதல்வர் கலைஞர் அவர்களை மக்கள் காவலர் டாக்டர் அய்யா சந்தித்த காட்சிகள்

  • வியாழன், 28 அக்டோபர், 2010
  • போராளி
  • மக்கள் காவலர் டாக்டர் அய்யா முதல்வரிடம் மனு கொடுத்த காட்சி உடன் ஜி.கே.மணி எம்..எல்.ஏ

         முதல்வருக்கு பொன்னாடை போர்த்துகிறார் மக்கள் காவலர் டாக்டர் அய்யா  அவர்கள்
          உடன்  ஜி.கே.மணி  மற்றும் தி.மு,க அமைச்சர்கள்

    புதன், 27 அக்டோபர், 2010

    சாதிவாரிக்கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டி - டாக்டர் அய்யா முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு

  • புதன், 27 அக்டோபர், 2010
  • போராளி

  • தமிழக முதல்வர் கருணாநிதியுடன் மக்கள் காவலர் டாக்டர் அய்யா

    ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்று கோரி பல்வேறு சமுதாயத் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதியை இன்று டாக்டர் அய்யா சந்தித்துப் பேசினார்.

    அவருடன் யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன்,தேவர் பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணன், நாடார் பேரவை பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ் மற்றும் முஸ்லீம்,கிருஸ்துவர்,உள்பட 27சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் அவருடன் முதல்வரை சந்தித்துப் பேசினர்.
    சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
    சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ்,ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தமிழகத்தில் உள்ள 27 சமுதாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் முதல்வரை சந்தித்தேன். இந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

    எப்படி, எந்த வழிமுறைகளில், எந்த நேரத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்து எங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளோம். இது தொடர்பாக பேசிய முதல்வர், இதில் தனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், இதை தானும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


    நாங்கள் கொடுத்த மனுவை படித்து பார்த்துவிட்டு, உடனடியாக தமிழக பிற்படுத்தப்பட்ட நல ஆணையர் நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார் என்றார் ராமதாஸ்.

    கேள்வி:  இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தான் தமிழகத்திலும் நடத்த முடியும் என்று முதல்வர் ஏற்கனவே கூறியிருந்தாரே?
    அய்யா:
    2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தேசிய அளவில் கணக்கெடுப்பு நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள். தனியாக ஆணையம் இந்த கணக்கெடுப்பை நடத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்ப முடியாது. பாதியில் கூட அவர்கள் இதை கைவிட்டு விடலாம்.
    மேலும் அந்த கணக்கெடுப்பு சமுக, பொருளாதார நிலைமைகளை உள்ளடக்கியதாக இருக்காது. ஆனால், அப்படிப்பட்ட கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    அதில் ஜாதிவாரியான கணக்கெடுப்பை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை முதல்வரிடம் வலியுறுத்தினோம். வெறும் தலைகளை எண்ணும் கணக்கெடுப்பால் பலன் இல்லை என்று தேசிய அளவில் சமுக ஆர்வலர்களும் கூறியிருப்பதையும் முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.

    கேள்வி: இதற்கு கலெக்கெடு எதுவும் நிர்ணயித்திருக்கிறீர்களா?

    அய்யா:
                     2011ம் ஆண்டு ஜனவரிக்குள், அதாவது நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.நீதிபதி ஜனார்த்தனனுடன் கலந்து பேசி முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

    கேள்வி: திமுக-பாமக இடையே மீண்டும் கூட்டணி உருவாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளனவே?
    அய்யா: பத்திரிக்கைகளில் தான் அப்படி செய்திகள் வருகின்றன. இன்று நாங்கள் அது பற்றி எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பு அதற்காகவும் அல்ல. மிகவும் பின்தங்கிய மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை அளிப்பதற்காக நடைபெற்ற சந்திப்பு இது.

    கேள்வி: கூட்டணி தொடர்பாக மீண்டும் முதல்வரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டா?
    அய்யா: அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால், இன்று நடைபெற்ற சந்திப்பு அதற்காக அல்ல என்றார் ராமதாஸ்.

    இதற்கு முன் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஆன்மிகத் தலைவர்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் ராமதாஸ்.
    அவரது கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சாதிவாரிகணக் கெடுப்பை நடத்த வலியுறுத்தி கருணாநிதியை டாக்டர் ராமதாஸ் சந்திக்கிறார்

  • போராளி
  • சட்டமன்ற தொகுதிகள் - பாராளுமன்ற தொகுதி வாரியாக

  • போராளி
  • இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் பட்டியல் இங்கே...



    1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி

    1. கும்மிடிப்பூண்டி

    2. பொன்னேரி (தனி)

    3. திருவள்ளூர்

    4. பூந்தமல்லி (தனி)

    5. ஆவடி

    6. மாதவரம்



    2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி

    1. திருவொற்றியூர்

    2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

    3. பெரம்பூர்

    4. கொளத்தூர்

    5. திரு.வி.க. நகர் (தனி)

    6. ராயபுரம்



    3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி

    1. விருகம்பாக்கம்

    2. சைதாப்பேட்டை

    3. தியாகராயநகர்

    4. மயிலாப்பூர்

    5. வேளச்சேரி

    6. சோழிங்கநல்லூர்



    4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி

    1. வில்லிவாக்கம்

    2. எழும்பூர் (தனி)

    3. துறைமுகம்

    4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

    5. ஆயிரம் விளக்கு

    6. அண்ணாநகர்



    5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி

    1. மதுரவாயல்

    2. அம்பத்தூர்

    3. ஆலந்தூர்

    4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

    5. பல்லாவரம்

    6. தாம்பரம்



    6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி

    1. செங்கல்பட்டு

    2. திருப்போரூர்

    3. செய்யூர் (தனி)

    4. மதுராந்தகம் (தனி)

    5. உத்திரமேரூர்

    6. காஞ்சிபுரம்



    7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி

    1. திருத்தணி

    2. அரக்கோணம் (தனி)

    3. சோளிங்கர்

    4. காட்பாடி

    5. ராணிப்பேட்டை

    6. ஆற்காடு



    8. வேலூர் பாராளுமன்ற தொகுதி

    1. வேலூர்

    2. அணைக்கட்டு

    3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)

    4. குடியாத்தம் (தனி)

    5. ஆம்பூர்

    6. வாணியம்பாடி



    9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி

    1. ஊத்தங்கரை (தனி)

    2. பர்கூர்

    3. கிருஷ்ணகிரி

    4. வேப்பனஹள்ளி

    5. ஓசூர்

    6. தளி



    10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி

    1. பாலக்கோடு

    2. பென்னாகரம்

    3. தர்மபுரி

    4. பாப்பிரெட்டிபட்டி

    5. அரூர் (தனி)

    6. மேட்டூர்



    11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி

    1. ஜோலார்பேட்டை

    2. திருப்பத்தூர்

    3. செங்கம் (தனி)

    4. திருவண்ணாமலை

    5. கீழ்பெண்ணாத்தூர்

    6. கலசப்பாக்கம்



    12. ஆரணி பாராளுமன்ற தொகுதி

    1. போளூர்

    2. ஆரணி

    3. செய்யார்

    4. வந்தவாசி (தனி)

    5. செஞ்சி

    6. மைலம்



    13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி

    1. திண்டிவனம் (தனி)

    2. வானூர் (தனி)

    3. விழுப்புரம்

    4. விக்கிரவாண்டி

    5. திருக்கோயிலூர்

    6. உளுந்தூர்பேட்டை



    14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி

    1. ரிஷிவந்தியம்

    2. சங்கராபுரம்

    3. கள்ளக்குறிச்சி (தனி)

    4. கங்கவல்லி (தனி)

    5. ஆத்தூர் (தனி)

    6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)



    15. சேலம் பாராளுமன்ற தொகுதி

    1. ஓமலூர்

    2. எடப்பாடி

    3. சேலம் (மேற்கு)

    4. சேலம் (வடக்கு)

    5. சேலம் (தெற்கு)

    6. வீரபாண்டி



    16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி

    1. சங்ககிரி

    2. ராசிபுரம் (தனி)

    3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)

    4. நாமக்கல்

    5. பரமத்தி வேலூர்

    6. திருச்செங்கோடு



    17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி

    1. குமாரபாளையம்

    2. ஈரோடு (கிழக்கு)

    3. ஈரோடு (மேற்கு)

    4. மொடக்குறிச்சி

    5. தாராபுரம் (தனி)

    6. காங்கேயம்



    18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி

    1. பெருந்துறை

    2. பவானி

    3. அந்தியூர்

    4. கோபிச்செட்டிபாளையம்

    5. திருப்பூர் (வடக்கு)

    6. திருப்பூர் (தெற்கு)



    19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி

    1. பவானிசாகர் (தனி)

    2. உதகமண்டலம்

    3. கூடலூர் (தனி)

    4. குன்னூர்

    5. மேட்டுப்பாளையம்

    6. அவிநாசி



    20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி

    1. பல்லடம்

    2. சூலூர்

    3. கவுண்டம்பாளையம்

    4. கோயம்புத்தூர் (வடக்கு)

    5. கோயம்புத்தூர் (தெற்கு)

    6. சிங்காநல்லூர்



    21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி

    1. தொண்டாமுத்தூர்

    2. கிணத்துக்கடவு

    3. பொள்ளாச்சி

    4. வால்பாறை (தனி)

    5. உடுமலைப்பேட்டை

    6. மடத்துக்குளம்



    22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி

    1. பழனி

    2. ஒட்டன்சத்திரம்

    3. ஆத்தூர்

    4. நிலக்கோட்டை (தனி)

    5. நத்தம்

    6. திண்டுக்கல்



    23. கரூர் பாராளுமன்ற தொகுதி

    1. வேடசந்தூர்

    2. அரவக்குறிச்சி

    3. கரூர்

    4. கிருஷ்ணராயபுரம் (தனி)

    5. மணப்பாறை

    6. விராலிமலை



    24. திருச்சி பாராளுமன்ற தொகுதி

    1. ஸ்ரீரங்கம்

    2. திருச்சி (மேற்கு)

    3. திருச்சி (கிழக்கு)

    4. திருவெறும்பூர்

    5. கந்தர்வகோட்டை (தனி)

    6. புதுக்கோட்டை



    25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி

    1. குளித்தலை

    2. லால்குடி

    3. மண்ணச்சநல்லூர்

    4. முசிறி

    5. துறையூர் (தனி)

    6. பெரம்பலூர் (தனி)



    26. கடலூர் பாராளுமன்ற தொகுதி

    1. திட்டக்குடி (தனி)

    2. விருத்தாசலம்

    3. நெய்வேலி

    4. பண்ருட்டி

    5. கடலூர்

    6. குறிஞ்சிப்பாடி



    27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி

    1. குன்னம்

    2. அரியலூர்

    3. ஜெயங்கொண்டம்

    4. புவனகிரி

    5. சிதம்பரம்

    6. காட்டுமன்னார்கோவில் (தனி)



    28. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி

    1. சீர்காழி (தனி)

    2. மயிலாடுதுறை

    3. பூம்புகார்

    4. திருவிடைமருதூர் (தனி)

    5. கும்பகோணம்

    6. பாபநாசம்



    29. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதி

    1. நாகபட்டினம்

    2. கீழ்வேலூர் (தனி)

    3. வேதாரண்யம்

    4. திருத்துறைப்பூண்டி (தனி)

    5. திருவாரூர்

    6. நன்னிலம்



    30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி

    1. மன்னார்குடி

    2. திருவையாறு

    3. தஞ்சாவூர்

    4. ஒரத்தநாடு

    5. பட்டுக்கோட்டை

    6. பேராவூரணி



    31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி

    1. திருமயம்

    2. ஆலங்குடி

    3. காரைக்குடி

    4. திருப்புத்தூர்

    5. சிவகங்கை

    6. மானாமதுரை (தனி)



    32. மதுரை பாராளுமன்ற தொகுதி

    1. மேலூர்

    2. மதுரை கிழக்கு

    3. மதுரை வடக்கு

    4. மதுரை தெற்கு

    5. மதுரை மையம்

    6. மதுரை மேற்கு



    33. தேனி பாராளுமன்ற தொகுதி

    1. சோழவந்தான் (தனி)

    2. உசிலம்பட்டி

    3. ஆண்டிபட்டி

    4. பெரியகுளம் (தனி)

    5. போடிநாயக்கனூர்

    6. கம்பம்



    34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி

    1. திருப்பரங்குன்றம்

    2. திருமங்கலம்

    3. சாத்தூர்

    4. சிவகாசி

    5. விருதுநகர்

    6. அருப்புக்கோட்டை



    35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி

    1. அறந்தாங்கி

    2. திருச்சுழி

    3. பரமக்குடி (தனி)

    4. திருவாடானை

    5. ராமநாதபுரம்

    6. முதுகுளத்தூர்



    36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி

    1. விளாத்திகுளம்

    2. தூத்துக்குடி

    3. திருச்செந்தூர்

    4. ஸ்ரீவைகுண்டம்

    5. ஒட்டபிடாரம் (தனி)

    6. கோவில்பட்டி



    37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி

    1. ராஜபாளையம்

    2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

    3. சங்கரன்கோவில் (தனி)

    4. வாசுதேவநல்லூர் (தனி)

    5. கடையநல்லூர்

    6. தென்காசி



    38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி

    1. ஆலங்குளம்

    2. திருநெல்வேலி

    3. அம்பாசமுத்திரம்

    4. பாளையங்கோட்டை

    5. நாங்குநேரி

    6. ராதாபுரம்


    39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி

    1. கன்னியாகுமரி

    2. நாகர்கோவில்

    3. குளச்சல்

    4. பத்மநாபபுரம்

    5. விளவன்கோடு

    6. கிள்ளியூர்



    திங்கள், 25 அக்டோபர், 2010

    பா.ம.க. இளைஞர்கள்- இளம் பெண்கள் பயிற்சி முகாம் - கடலூர் மாவட்டம் புவனகிரி

  • திங்கள், 25 அக்டோபர், 2010
  • போராளி
  • கடலூர் மாவட்டம் புவனகிரி சட்ட மன்ற தொகுதியில் உள்ள ஊத்தங்காலில் பா.ம.க. இளைஞர்கள்- இளம் பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    பா.ம.க. மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
    மாநில மருத்து வரணி பொருளாளர் அசோக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் செல்வ குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன், ஒன்றிய தலைவர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராசு வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மாநில தலைவர் கோ.க.மணி, முன்னாள் எம்.பி. பொன்னுசாமி, வேல்முருகன் எம்.எல்.ஏ., மாநில துணை பொது செயலாளர் திருமால்வளவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

    பா.ம.க. இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது :-

    “புவனகிரி தொகுதியில் வரும் தேர்தலில் போட்டியிட 10 பேர் விருப்பம் தெரிவித் துள்ளார்கள். ஆனால், சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு ஒரு மாதம் முன்பு தான் வேட்பாளர் களை அறிவிப்பேன். அதுவரை அனைவரும் கட்சி பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். பா.ம.க.வில் 18 முதல் 30 வயதுடைய இளம்பெண்கள், இளைஞர் களை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் கட்சி கொடுக்கப்படும்.

    அவர்கள் டாக்டர் அன்புமணி தலைமையில் தான் அணிவகுக்க வேண்டும். இது காலத்தின் மாற்றம் அல்ல. காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் யார் யாரோ ஆட்சி செய்துள்ளார்கள். ஆனால், இதுவரை ஒரு வன்னியர் கூட ஆளவில்லை. இதற்கு காரணம் சமுதாய ஒற்றுமை இல்லாததே. வரும் தேர்தலில் 100 தொகுதியில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் 500 ஜாதிகள் உள்ளது. இதில் 6 கோடி மக்கள் உள்ளனர். இந்த மக்கள் தொகையில் 2 கோடி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். எனவே, வன்னியர் தமிழகத்தை ஆள வேண்டும்.

    அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கின்றனர். ஒருவரிடமும் கூட்டணியில் இருக்கமுடியவில்லை. ஏனென்றால் அவர்கள் நம்மை அழிக்க பார்க்கின் றனர். வன்னிய ஓட்டுகள் அனைத்தும் நம்மிடம் இருக்க வேண்டும்.

    இருந்தால், வரும் தேர்தலில் நாம் ஆட்சி செய்ய முடியும்.இதனால் தமிழ்நாடு வாழும், உயரும், வளம் பெறும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோற்கடிக்கப்பட்டோம். இது நியாயமா? தோல்வி என்பது வெற்றி யின் அறிகுறியாகும்.

    நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை நடந்து வருகிறது. நாங்கள் அதிகளவில் கேட்கவில்லை. தொழி லாளர்கள் சிந்தும் ஒரு துளி வியர்வைக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும். இன்று போராடும் தொழிலாளர் களின் முன்னோர்கள் தங்களின் இடங்களில் பாது காத்து வைத்திருந்த கருப்பு தங்கமான நிலக்கரியை நீங்கள் எடுத்து, மின்சாரம் தயாரித்து ரூ.2 ஆயிரம் கோடி லாபம் என காட்டி வருகிறீர்கள்.

    எங்களுக்கு பிச்சைபோட வேண்டாம். நியாயமான விலையை கொடுக்க வேண்டும். என்.எல்.சி. பிரச்சினை சம்மந்தமாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடைசியாக போராட்டகளத்தில் இறங்குங்கள் என்றார். ஆனால், போராட்டம் என்றாலே முன்னால் வந்து நிற்பது தான் எனது பழக்கம்.
    ஒப்பந்த தொழிலாளர் களின் போராட்டத்திற்கு விரைவில் சுமூகதீர்வு காணவில்லையெனில், எங்கள் போராட்டம் கடுமை யாக இருக்கும். நாங்கள் போராட்டம் நடத்தினால் என்.எல்.சி. நிர்வாகம் தாங் காது. தினமும் மின்சார உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு தொழிலாளர்கள் காரணம் அல்ல. நிர்வாகமே காரணம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.



    கூட்டத்தில் ஊத்தங்கால் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் வெங்கடேசன், வேல்முருகன், மாநில துணை தலைவர் சண்முகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவி சிலம்புசெல்வி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முருகன், மாநில துணை தலைவர் சவுந்தரபாண்டியன், மாநில தேர்தல் பணிக்குழு தனபால், முன்னாள் மாநில துணை பொது செயலாளர் திருஞானம், டாக்டர் அன்பு குமார், உதயக் குமார், பேரூர் செயலாளர் வேல்முருகன், தலைவர் வெங்கடேசன், ஊத்தங்கால் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயலாளர் தர்ம லிங்கம், ஊத்தங்கால் நிர்வாகிகள் தங்கதுரை, ராஜேந்திரன், சம்மந்தம், விஜய்குமார், விருத்தாசலம் நகர தலைவர் சீனுவாசன், தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்க மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் உத்தண்டி நன்றி கூறினார்.

    ஆவடி நகர துணைச் செயலராக ஏ.கே. சு

  • போராளி
  • தமிழக சட்ட மேலவைத் தேர்தலில் வாக்காளராக கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் - விவரம் கீழே

  • போராளி
  • பட்டதாரிகளுக்கு(Form18) ஆசிரியர்தொகுதிகளுக்கு(Form19)

    மேலும் அனைத்து விவரங்களுக்கு

    இங்கு கிளிக் செய்யவும்

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நீக்க விண்ணப்பம்

  • போராளி
  • மது அருந்தி, புகை பிடித்து சீரழிந்து வரும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்காக போராடும் கட்சி பா.ம.க. டாக்டர் ராமதாஸ்

  • போராளி
  • மது அருந்தி, புகைபிடித்து சீரழிந்து வரும் இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்காக தொடர்ந்து போராடி வரும் கட்சி பா.ம.க. என்று மேச்சேரியில் நடந்த பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.


    பயிற்சி முகாம் மேட்டூர் தொகுதி பா.ம.க. இளைஞர்கள் & இளம்பெண்கள் பயிற்சி முகாம் மேச்சேரியில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    முகாமில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:&

    ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களையும், சினிமாக்காரர்களையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது. இன்று இளைஞர்கள் மது குடித்தும், புகைபிடித்தும் தங்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக, மதுவை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஒரே கட்சி பா.ம.க. உயர்படிப்பு படிக்க வாய்ப்பு எந்த நடிகராவது, எந்த கட்சித் தலைவராவது இளைஞர்களை நல்வழிப்படுத்த மது குடிக்க வேண்டாம், புகை பிடிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்களா?. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்ததின் காரணமாக இன்று நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர் படிப்புகள் படிக்க முடிகிறது. நான் மருத்துவ படிப்பு படிக்கும் போது 1000&ம் பேரில், 3 பேர் மருத்துவ படிப்பு படித்தனர். எனக்கு பிறகு டாக்டர் அன்புமணி படிக்கும் போது 1000 பேரில் 8 பேர் மருத்துவ படிப்பு படிக்கும் நிலை வந்தது. இன்று 1000 பேரில் 250 பேர் மருத்துவ படிப்பு படிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த இடஒதுக்கீட்டை பெற்று தர பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். இந்த பகுதியில் உள்ள அமரத்தானூரைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று தனது உயிரை நீத்தார். இதை போன்ற தியாகிகளால் வன்னியர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கிடைத்தது. இடஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தி நான் 15 முறை ஜெயிலுக்கு சென்றுள்ளேன். 21 பேர் தங்களின் உயிரை நீத்துள்ளார்கள்.

    அழிக்க நினைத்தனர் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் மத்தியில் மந்திரிகளாக இருந்த போது பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்தியில் பிரதமராக இருந்த வாஜ்பாய், தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் மந்திரி லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களை எல்லாம் நான் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கொடுத்து தமிழக மக்களுக்காக திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்தேன். நமது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் நம்மை அழிக்க நினைத்தார்கள்.

    அழிக்க முடியாது

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் திட்டமிட்டு 7 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டோம். எல்லா கட்சிகளும் வெற்றி பெற்ற நிலையில் நம்மை திட்டமிட்டு தோற்கடிக்க பார்த்து அழிக்க நினைத்தார்கள். நம்மை யாரும் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையை பற்றி நாம் சிந்திக்கிறோம். விவசாயிகளை பற்றி நாம் சிந்திக்கிறோம். நல்ல பல திட்டங்கள் தீட்டி வருகிறோம். அதெல்லாம் வன்னியர்கள் தமிழ்நாட்டில் ஆளும் நிலை வரும் போது நடக்கும். இளைஞர்களும், இளம் பெண்களும் பா.ம.க.வில் சேர்ந்து பாடுபட்டால் தமிழகம் வளம் பெரும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

    டாக்டர் அன்புமணி முகாமில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி பேசியதாவது:&

    இளைஞர்கள், இளம்பெண்களை நல்வழிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் வாழ்வுரிமைக்காவும் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. நமது கட்சியில் சேரும் அனைவரும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். நம்மை ஒழிக்க வேண்டும் என்று சில கட்சிகள் சூழ்ச்சி செய்தன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதியிலும் தோற்கடிக்கப்பட்டோம். வரும் தேர்தலில் நாம் யாருடன் கூட்டணி என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நமது நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பார்த்து கொள்வார். அவர் நல்ல முடிவு எடுப்பார். மேட்டூர் தொகுதியில் நாம் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை.

    கடந்த 43 ஆண்டுகளாக சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்&அமைச்சராக இருக்கிறார்கள். சினிமா ஒரு பொழுது போக்கு. அதை பாருங்கள். அத்தோடு விட்டு விடுங்கள். அதுவே வாழ்க்கை அல்ல. சினிமாக்காரர்கள் பேச்சை நம்பி அவர்களிடம் போகாதீர்கள்.


    வரும் காலத்தில் பா.ம.க. தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இவ்வாறு டாக்டர் அன்புமணி பேசினார்.

    வியாழன், 21 அக்டோபர், 2010

    மக்கள் பிரச்சினைகளுக்காக பா.ம.க. தொடர்ந்து போராட்டம் நடத்தும்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

  • வியாழன், 21 அக்டோபர், 2010
  • போராளி
  • தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சைதாப்பேட்டையில் பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு பகுதி செயலாளர் டி.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். துரை வரவேற்றார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:-

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லாதது போல கற்பனை செய்து கொண்டு, பா.ம.க.வினர் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
    இதில் எந்தவித கற்பனையும் இல்லை.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. இதை நாங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறோம்.
    2011 பிப்ரவரியில் நடை பெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு சமுதாயத்தின் சமூக பொருளாதார பின்னணியோடு கூடிய விவரங்கள் கிடைக்கும்.
    தனியாக கணக்கெடுப்பு நடத்தினால் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று தலைகளை மட்டும்தான் கணக்கெடுக்க முடியும். இதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே 2011 ஜூன் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்பது கண்துடைப்பு.
    நான் இந்த அரசை எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டு மட்டும் இருக்க முடியாது. மக்கள் பிரச்சினைகளை முன்நிறுத்தி பா.ம.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தும். இதை இந்த அரசால் தாங்க முடியவில்லை.
    தமிழ்நாட்டில் மீண்டும் மேல்-சபை அமைக்க வேண்டும் என்பது முதல்- அமைச்சர் கருணாநிதியின் 25 வருட கனவு. அது இந்த ஆண்டு நிறைவேறியுள்ளது. இதற்கு பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவுதான் காரணம்.
    அன்புமணிக்கு டெல்லி மேல்-சபை தேர்தலில் இடம் தருவதாக தி.மு.க.வினர் கூறி வந்தனர். ஆனால் பிறகு நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டி எங்களை ஏமாற்றி விட்டனர்.
    நாங்கள் அரசியல் வியாபாரம் நடத்துவதாகவும், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டுள்ளார். தி.மு.க.வும் பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளது. அவர்களுக்கு பா.ம.க.வை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    கூட்டத்தில் ஏ.கே.மூர்த்தி, வேல்முருகன் எம்.எல்.ஏ., சைதை சிவா, இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் கன்னியப்பன், ரமேஷ், ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மாற்று அணிக்கு தலைமை ஏற்க பா.ம.க. தயார்: டாக்டர் ராமதாஸ்

  • போராளி
  • சென்னை, செப். 2: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது மாற்று அணிக்கு தலைமையேற்க பா.ம.க. தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

    தென்சென்னை மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

    தமிழகம் எல்லா வகையிலும் மிகச் சிறந்த மாநிலமாக முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் பா.ம.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால், இன்றைய நிலையில் சாராயம் குடிப்பதிலும், சினிமா தொழிலிலும்தான் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

    தமிழகத்தில் உள்ள குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.351 என்று தமிழக அரசின் திட்டக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு குடும்பத்தின் தினசரி வருமானம் சுமார் ரூ.12 மட்டுமே. ஆக, இங்கு வறுமை ஒழிக்கப்படவில்லை.

    கல்வியும், வேலைவாய்ப்பும் அளித்திருந்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, சமுதாயம் தானாகவே முன்னேறியிருக்கும். ஆனால், இங்குள்ளவர்கள் மக்களுக்கு இலவசங்களை தந்து, அவர்களை நிரந்தர வாக்கு வங்கியாக வைத்திருக்க மட்டுமே விரும்புகின்றனர்.

    இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்குகின்றனர். அது அவசியம்தானா? தொலைக்காட்சி பெட்டி இல்லாமல் வாழ்க்கையே இல்லையா இலவசங்களை மட்டும் பெற்று வரும் எந்த ஒரு சமுதாயமும் முன்னேற முடியாது.

    உணவுப் பாதுகாப்பு பற்றி ஆட்சியாளர்கள் பேசுகின்றனர். மக்களிடம் உள்ள விளைநிலங்களையெல்லாம் பறித்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு பணக்கார நிறுவனங்களிடம் அளித்த பின், உணவுப் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும்?

    தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் எவ்வளவு பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது அவர்களில் தமிழர்கள் எத்தனை பேர்? நிலம் கொடுத்தவர்களில் எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது? இந்த விவரங்களைத் தர தமிழக அரசு தயாரா?

    தமிழக மக்களைப் பொருத்தவரை, மாநிலத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நல்ல கொள்கைகளையுடைய, நல்ல கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

    மக்கள் விரும்பக் கூடிய அந்த மாற்றத்தை தர பா.ம.க. தயாராக உள்ளது. இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களைத் தயார்படுத்தும் பணியை இப்போது பா.ம.க.வினர் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மக்கள் விரும்பினால் தமிழகத்தில் மூன்றாவது மாற்று அணி ஒன்றுக்கு தலைமை ஏற்க பா.ம.க. தயாராக உள்ளது. விஜயகாந்த் தலைமையிலான கட்சியுடன் பா.ம.க. கூட்டணி சேருமா என்றால், அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர பகைவரும் இல்லை என்பதே இப்போதைக்கு பதிலாகக் கூற முடியும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எப்போதுமே பா.ம.க.வின் நலன் விரும்பி. அதனால்தான், தாங்கள் இருக்கும் தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். எனினும், அது குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது.

    மூன்று மாதத்துக்கு முன்பு தி.மு.க.வுடன் கூட்டணி பேசிய பா.ம.க., இப்போது தி.மு.க.வை மீண்டும் கடுமையாக விமர்சிப்பது ஏன் என்று கேட்கிறீர்கள். நாங்கள் தனிப்பட்ட முறையில் தி.மு.க.வை விமர்சிக்கவில்லை. நாங்கள் ஒரு எதிர்க்கட்சி. வேறு எதிர்க்கட்சியை நாங்கள் விமர்சிக்க முடியாது. ஆட்சியில் உள்ளவர்களைத்தான் விமர்சிக்க முடியும். அந்த வகையில்தான் ஆட்சியில் நடைபெறும் குறைகளை சுட்டிக் காட்டுகிறோம்.

    தி.மு.க. ஆட்சிக்கு இப்போது நாங்கள் மார்க் போட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், மக்கள் மார்க் போட வேண்டிய நேரம் (தேர்தல்) நெருங்கி விட்டது.

    ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நான் கூறுவதற்கெல்லாம் தலையாட்ட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு நான் கூறவில்லை. உச்ச் நீதிமன்றம் கூறியுள்ளது. அதைச் செய்யாவிட்டால் தமிழகத்தில் இப்போது உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு உரிமை பறிபோய்விடும் என்றார் ராமதாஸ்.

    முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    கல்விக் கட்டண உயர்வு குறித்து - அம்பத்தூர் நகர சபைத் தலைவர் கே.என்.சேகர் ஆர்ப்பாட்டம்

  • போராளி
  • சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

  • போராளி
  • ராஜபக்‌ஷே - எதிர்த்து பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் ஆர்ப்பாட்டம்

  • போராளி
  • சட்டசபை தேர்தல் பிரச்சாரம் அடியெடுத்து வைக்கிறது பாமக

  • போராளி
  • புதன், 20 அக்டோபர், 2010

    மீண்டும் இட ஒதுக்கீட்டு போராட்டம்

  • புதன், 20 அக்டோபர், 2010
  • போராளி
  • பேரவைத் தேர்தலுக்கு தயாராகிறது பா.ம.க

  • போராளி
  • சாதிவாரி கணக்கெடுப்பு கோரி மக்கள் திரள் பொதுக்கூட்டம்

  • போராளி
  • வன்னியர் பெருவிழா செய்திதாள் படங்கள்

  • போராளி










  • சித்திரைமுழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா செய்திதாள் படங்கள்

  • போராளி



  • வெள்ளி, 15 அக்டோபர், 2010

    ஈழத் தமிழர்களுக்காக போராட்டத்தில் தமிழின போராளி

  • வெள்ளி, 15 அக்டோபர், 2010
  • போராளி





  • இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, மனிதச் சங்கிலி அணிவகுப்பு சனிக்கிழமை அக்டோபர் 25 2008 அன்று நடைபெற்றது கொட்டும் மழையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகம் அருகே மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்ட காட்சி காரிலிருந்து வாழ்த்து தெரிவிக்கிறார் முதல்வர் கருணாநிதி


    ஈழ விடுதலைப் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப் படுவதற்கும், வெற்றி
    பெறுவதற்கும் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு உருவாவதற்கு முழுமையாகஉதவுவோம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் கூறுகிறது.
    சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில், நடந்த மாநாட்டில், உலகத் தமிழர் பிரகடனத்தை மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலர் வைகோ படித்து வெளியிட்டார்.

    உலகத் தமிழர் பிரகடனம் வருமாறு

    1. ஈழத் தமிழ் மக்களின் மரபு வழி தாயகத்தில் அவர்களுக்கு முழுமையான மனித, ஜனநாயக உரிமைகள் வழங்கிடவும், அதற்கேற்ற அரசியல் அமைப்பிற்குஉத்தரவாதம் தரக்கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக உலகமக்களின், அரசுகளின் ஆதரவைத் திரட்டிடவும், ஈழத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ளக் கூடியத் தீர்வு ஒன்றை அவர்களின் பிரச்சனையைத் தீர்க்கும் ஒரே வழி என்பதிலும் நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

    2. தங்கள் தாயகத்திலும், உலக நாடுகளிலும் புலம் பெயர்ந்திருக்கக்கூடிய ஈழத் தமிழர்கள் அனைவரும் அவரவர்களின் ஊர்களிலும், வீடுகளிலும் மீண்டும் குடியேறவும், அமைதியான, இயல்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் துணை நிற்க நாங்கள் உறுதி பூணு‌கிறோ‌ம்.

    3. தமிழர் தாயக மண்ணில் அத்துமீறி உருவாக்கப்பட்ட சிங்களக்
    குடியேற்றங்களையும், சிங்கள இராணுவ முகாம்களையும் மற்றும் இராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற வேண்டும் என ஐ.நா.வை வற்புறுத்த நாங்கள் உறுதி பூணுகிறோம்.

    4. இலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான
    கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இராணுவ அதிகாரிகளும், அவர்களை ஏவிவிட்ட சிங்கள அரசியல் வாதிகளும் சர்வதேச நீதிமன்றத்தில்போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி பூணுகிறோம்.
    5. உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான, இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையில் தங்களின் எதிர்காலத்தை தாங்களே முடிவு செய்துகொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும் அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலைநிறுத்திக்கொள்ள அவர்களுக்கு தோள் கொடுத்து துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாங்கள் உறுதிபூணுகிறோம்.

    6. அளப்ப‌ரிய தியாங்களைச் செய்த ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக
    இறுதிவரை போராடிய போராளிகளும், வீறுகொண்டு நடத்திய விடுதலைப்
    போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாக பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம்
    முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அந்த மக்கள் விரும்பி
    ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு உருவாவதற்கும் நாங்கள் முழுமையாக
    உதவுவோம். அதற்காக எங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக்கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்போம் என உலகளாவிய தமிழர்களாகிய நாங்கள் உறுதி பூணுகிறோம்.
    பிரகடனம் படித்து முடிக்கப்பட்ட பிறகு ஈழத் தமிழர்களுக்கு உதவ சர்வபறி
    தியாகத்திற்கும் தயார் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    ஏராளமான கருஞ்சட்டை தரித்த பா.ம.க தொண்டர்கள் மற்ற கட்சிகளின் இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி அந்த உறுதிமொழியை ஏற்றனர். அவர்கள் அனைவருடைய சட்டையிலும் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டிருந்தது. பின்புறத்தில் தமிழீழத்தின்வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது.
     
    அக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
     
    விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அதன் பிறகும் 3 லட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைப்பது ஏன்? முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள். 15 வயதைக் கடந்த தமிழ் ஆண்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பெண்களின் கற்பு சூறையாடப்படுகிறது. இந்த அவலங்களை காண மனித உரிமை ஆர்வலர்களால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதி இலங்கையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார். இப்போது அங்கு சுமுக நிலை நிலவுகிறதா என்பதை அவர் தனது மனசாட்சிப்படி கூறட்டும்.
    1985-ம் ஆண்டு டெசோ மாநாட்டில் பேசிய கருணாநிதி, தமிழ் ஈழம்தான் இறுதித் தீர்வு; தமிழ் ஈழத்தை ஆதரிப்பதற்காக எந்த அடக்குமுறையை ஏவிவிட்டாலும் தாங்கிக் கொள்ளத் தயார் என்றார். அன்று கருணாநிதி கூறியதைத்தான் இன்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் எங்கள் மீது அவர் அடக்குமுறையை ஏவுகிறார் என்றார் ராமதாஸ்.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க
    ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது:

    தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது குற்றமாகாது; அந்த
    இயக்கத்துக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை செய்தால் மட்டுமே குற்றம் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின் படியே, பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
    எனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவதில் தவறில்லை. அவ்வாறு பேசக் கூடாது என தமிழக அரசு கூறுவது அடக்குமுறை நடவடிக்கை ஆகும் என்றார்.
    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், புதிய பார்வை ஆசிரியர் எம். நடராஜன், மக்கள்
    கண்காணிப்பகம் அமைப்பின் நிர்வாகி ஹென்றி திபேன் உள்ளிட்டோர் பேசினர்.
    கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, பண்ருட்டி வேல்முருகன் , ஏ.கே.மூர்த்தி,இலங்கைத் தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து பாமகவினர் போராட்டம்

  • போராளி

  • மகிழ்ச்சி திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • போராளி

  • யாருடன் கூட்டணி

  • போராளி

  • நன்றி நன்றி

  • போராளி






  • அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை - டாக்டர் இராமதாஸ்

  • போராளி

  • மாமல்லபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதால் பதற்றம்

  • போராளி



  • மாமல்லபுரத்தில் டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்த மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாமல்லபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. செங்கல்பட்டில் 2 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மாமல்லன் சிலை உடைப்பு1992& ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்ரா பவுர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழாவன்று அங்குள்ள பைபாஸ் சாலை நுழைவு வாயில் அருகில் வன்னியர் சங்கம் சார்பில் கருங்கல்லினால் நிறுவப்பட்ட மாமல்லன் சிலையை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்திருந்தார்.
    நேற்று நள்ளிரவு மர்ம ஆசாமிகள் சிலர் மாமல்லன் சிலையை உடைத்து சேதப்படுத்தினர். சிலையின் கையில் பிடித்திருந்த கத்தி உடைந்து காணப்பட்டது. மேலும் சிலையின் கீழிருந்த பா.ம.க., வன்னியர் சங்க கல்வெட்டுகளை உடைத்து, கொடிகள் எரித்து ஸேதப்படுத்தப்பட்டிருந்தன.பா.ம.க. சாலை மறியல்இதையடுத்து மாமல்லன் சிலை உடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் நேற்று காலை 8 மணி அளவில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சுமார் 2 ஆயிரம் பேர் சிலை உடைக்கப்பட்ட பகுதியில் திரண்டனர்.மாமல்லன் சிலையை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் பா.ம.க. மாநில துணைப்பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம் ஆகியோர் தலைமையில் மாமல்லபுரம் நகர செயலாளர் வ.பாலன், பா.ம.க. மாவட்ட நிர்வாகிகள் பி.வி.கே. வாசு, என்.கணேசமூர்த்தி, நகர நிர்வாகிகள் எம்.ஆர்.சீனிவாசன், எம்.பி.தயாளன், சத்திரிய வன்னிய இளைஞர் சங்க தலைவர் பி.வி.களத்தூர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் மாமல்லபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.போலீஸ் குவிப்புகாஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுதப்படை போலீசார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா, செங்கை வருவாய் கோட்ட அலுவலர் லெனின் ஜேக்கப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலையை உடைத்த மர்ம ஆசாமிகளை கைது செய்ய வேண்டும், மீண்டும் அதே இடத்தில் புதிய மாமல்லன் சிலையை அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். புதிய சிலை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும், மர்ம ஆசாமிகளை கைது செய்வதாகவும் உறுதி அளித்ததன் பேரில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலை கைவிட்டனர்.4 மணி நேரம் பாதிப்புஇந்த சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் காலை 8 மணி முதல் 12 மணி வரை 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது புதுவைக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்கழுக்குன்றத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் காலை முதல் மதியம் வரை ஓடவில்லை. மதியத்துக்குப்பின் ஒருசில பஸ்கள் ஓடின. செங்கல்பட்டில் பஸ்களின் கண்ணாடிகள் உடைப்புமாமல்லபுரத்தில் மாமல்லன் சிலையை உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டில் பா.ம.க.வினர் போராட்டத்தில் குதித்தனர். செங்கல்பட்டில் இருந்து வேடந்தாங்கலுக்கு சென்ற தனியார் பஸ்சை புதிய பஸ் நிலையம் அருகே நிறுத்தி அதன் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்பு கடப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ் மீது பெரிய கல்லை தூக்கிப் போட்டு முன் பக்க கண்ணாடியை உடைத்தனர். பின்னர் தனியாருக்கு சொந்தமான ஸ்வீட் கடை மற்றும், பேன்சி ஸ்டோர் கடைகளையும் அவர்கள் சூறையாடினர். செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகேயுள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலை வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேச்சு

  • போராளி

  • பாட்டாளி மக்கள் கட்சியின் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் கும்மிடிப்பூண்டி மற்றும் பெரியப்பாளையம் பகுதிகளில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு பா.ம.க வடக்கு மாவட்டச்செயலாளர் க.ஏ.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சீதாராமன், வே.சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்தலைவர் கோ.க.மணி, முன்னாள் அமைச்சர் வேலு, மாநில துணைபொதுச்செயலாளர் ரவிராஜ், தலைமை நிலைய செயலாளர் முத்துகுமார், இசக்கி படையாச்சி, துரை.ஜெயவேலு, மாவட்ட தலைவர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய கொள்கை விளக்க அணி செயலாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது; வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980 &ம் ஆண்டு கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். துப்பாக்கி சூடு கூட நடைபெற்ற அந்த போராட்டத்தின் போது 100 க்கும் மேற்பட்டவர்கள் சிறை சென்றனர். அந்த வகையில் பா.ம.க. வரலாற்றில் கும்மிடிப்பூண்டி மறக்க முடியாதது ஆகும்.
    2011ஆண்டு தமிழ்நாடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விவசாயம், கிராம வளர்ச்சி, இளைஞர்களின் மறுமலர்ச்சி, தமிழ் வளர்சி இவற்றுக்கு எல்லோம் பா.ம.க. திட்டம் போட்டு இருக்கிறது. அதனை வல்லுனர்கள் எல்லாம் பாராட்டுறாங்க. அதை நிறைவேற்ற பா.ம.க. தொண்டர்கள் பாடுபட வேண்டும். மதுக்கடை வேண்டாம் என்று கன்னியாகுமாரியில் இருந்து, கும்மிடிப்பூண்டி வரை நான் கேட்டு வருகிறேன். ஓட்டுப் போடும் ஜாதியாக மட்டுமே வன்னிய ஜாதியை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் சமூகமாற்றம் உருவாக வேண்டும் என்றால் பொது மக்கள் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலை வழங்க வேண்டும். இதுவே பா.ம.க.வின் அரசியல் திட்டமாக உள்ளது. இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார். முன்னதாக பிரகாஷ் வரவேற்றார். முடிவில் முருகதாஸ் நன்றி கூறினார்.108 ஆம்புலன்ஸ் திட்டம்ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க&வின் கனவு திட்டம்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம. தமிழகத்தில் அதை தற்போது யார்? யாரோ? தாங்கள் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து கொள்கின்றனர் என்று கூறினார்.முன்னதாக ஆத்துப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொத்தமான பெட்ரோல் பங்கை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    திருமண வாழ்த்து

  • போராளி

  • தனியார் பள்ளிகளைக் கண்டித்து

  • போராளி

  • புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு

  • போராளி